anarya poetry
என் கவிதைகளுக்கு
என்னால்
உரிமம் கோர இயலாது

அவைகளைப் புரிந்து கொண்டபின்
உங்களுக்கும்
சொந்தமாகி விடலாம்
தவறேதும் இல்லை

நாளை
அரசுக்கெதிராகவும்
சுரண்டலுக்கெதிராகவும்
எழுதப் போகிறேன்போகிறோம்

தயாராக இருங்கள்....

நான்
துப்பாக்கிக் குண்டுகளுக்கு
இரையாகலாம்
நிச்சயம் நீங்களும்....

-- த.வ.அநார்யா

வார்த்தைகளில்
அளவாய்த்தான்
என்னை
வெளிப்படுத்த முடியும்

உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தித் தானே
மொழியும் பிழைக்கிறது

என் வலிகள் கூட
தெளிவாய்ப் புரியாது

உணர்ச்சிகளில் நழுவும்
உண்மையைக் கண்டறிவதும்
கடினம்தான்
அதனால்
என்னை அறிவதும்
ஆதரிப்பதும்
அரிதுதான்

என்னோடு சேர்ந்து
செருப்பின்றி பயணி
எசப்பாட்டு பாட
அருகதை உனக்குண்டு

-- த.வ.அநார்யா

Creative Commons License
அநார்யா கவிதைகள் -1 by த வ அநார்யா is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

Creative Commons License
pen by Sean MacEntee is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

<code><strong><span class="has-inline-color has-vivid-red-color">த.வ.அநார்யா</span></strong></code>
த.வ.அநார்யா

தோழர் அநார்யா சமூக அரசியல் சார்ந்து காத்திரமான கவிதைகள் எழுதிவருகிறார். கரும்பலகை.in இனைய இதழின் ஆதர்ச கவிஞர்.